விரிந்து பரந்துகிடக்கும் வெளியில் எரிந்துகொண்டிருக்கும் கதிரவனை காலங்காலமாய் சுற்றிவரும் கோள்கள் கூட களைக்கவில்லை என்பதால்தான் காலமழை பெய்கிறது,கடும்வெயிலும் சுடுகிறது,இரவுபகல் வருகிறது,இயற்கையும் இணைகிறது.கோள்களின் கோடுதாண்ட கொள்கையால்தான் அவை மோதி உடையவில்லை,முறைமாறிப்போய் தனியாயும் கிடக்கவில்லை,தன்பாட்டில் தகரவில்லை,தான்போய் என்கேயும் இணையவில்லை.இயற்கைக்கு இருக்கும் இத்தனை நட்பு இன்று எவர் இதயத்தில் இருக்கிறது என்பதுதான் எனது கேள்வி?
"கெடுங்காலைக் கைவிடுவார்க் கேண்மை,அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்".....வேதனை வரும்போது விலகுவார் நட்பை,இறப்பின் வாசலில் நிற்கையில் நினைப்பினும் இதயம் சுடுகிறது. "கேட்டினும் உண்டோர் உறுதி, கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்"..... என்பதனால் வேதனைதான் வேண்டாத நட்பை விரட்டிவிட வழியமைக்குமென்கிறது குறள்.
நன்மை தீமை எதுவரினும் நானும் வருவேன் என்று கூறி,நாள் குறித்து நான்குபேர் சாட்சியாக நடத்தும் நாடகமல்ல நட்பு.வாதப்பிரதிவாதங்களுக்கிடையே வரம்புகட்டி வாழ்க்கை நடத்துவதுமல்ல நட்பு.மன்னித்துக்கொள்ளக் கூறி மறுபடியும் சந்தித்துக் கொள்வதுமல்ல நட்பு.இல்லை மாற்றானின் தடைகளுக்காய் பயந்து தாவிக்கொள்வதுமல்ல நட்பு.கட்சி மாற்றும் காடையர்க்கும் காவு கொள்ளும் கள்வர்கட்கும் கனதியான காட்சிப்பொருள் நட்பு மாற்றும் நீங்களல்லவா?வீட்டில் வைத்து விருப்பிவளர்க்கும் நாய் விருந்து போதாதென்று வீதியில் வீசியெறிந்த விருந்திலையை துலாவுவது போலிருக்கிறது உங்கள் கட்சித் தாவல்.
உணர்வுகளின் உரசலைவிட உதடுகளின் உரசலையும்,உள்ளத்தின் உரசலைவிட உடலின் உரசலையும்தான் உள்ளூரப்பார்க்கும் உங்களால்தான் காதலும், நட்பும் கற்பிழந்து கிடக்கிறது.காழ்ப்பிழந்து தவிக்கிறது.உங்களிடம் மாறுதல் வேண்டும் என்பதற்காய் என்னை மன்னிக்கவேண்டும்.என்னை மன்னிக்கவேண்டுமென்பதற்காய் நீங்கள் மாறித்தானாக வேண்டும்.துஞ்சிவிட்ட தூய நட்புப்பற்றி நான் தொடர்கதை எழுத விரும்பவில்லை.எழுதிவிட முடியாத அத்தியாயம் அது.ஆனால் துரோகக்கேண்மைபற்றி துளியேனும் எழுதவேண்டுமென்பதற்காய் மானுடத்தின் பாகத்தில் மறைந்து கிடக்கும் நட்பியல்பை நாகரீக வேகத்தில் நயவஜ்ஞனையை தேவைக்குப் பயன்படுத்தும் தேவையற்ற மனிதர்களின் தேடுதலை நிறுத்தி,வீடுமாறி உறவு கொள்ளும் அவ்விருந்தினரின் வேசத்தினை கலைத்துவிடத் தலைப்படுகிறது என்கரங்கள்.பாவத்தின் மன்னிப்பு பலதுக்கும் கொடுத்தாலும் பழகி பாய்ந்துவிட்டுப்போன பச்சோந்தித்தனத்திற்கு மாறுதல் கொடுக்கும்,மன்னிப்பளிக்கும் மறையெதுவோ,சட்டமெதுவோ,மனு நீதியெதுவோ கிழித்தெறியக் கொண்டுதாருங்கள்.
விலைபேசிப்போகும் பெண்ணுக்கும்,தேவைக்காய் பழகும் கேண்மைக்கும் என்ன வேறுபாடிருக்கிறது?இதை நான் சோகத்தில் சொல்லவில்லை.மானுட சமுகத்தின்பால் கொண்ட கோபத்தில் சொல்லியுள்ளேன்.தேகத்தின் பாதையில் ஓர் நாள் நானும் சடமானால் கூட உண்மை நட்பு மரணப்படுக்கையின் மலர்மாலை மணமாக இருக்கவேண்டுமென்ற வேகத்தில் எழுதிவிட்டேன்.பள்ளிப்படலைவரை வருவதுவோ நட்பு?இல்லை! பாடைவரை வருவதுவே நட்பு என்ற கோணத்தில் எழுதிவிட்டேன்.ஒன்றுமட்டும் கேட்கிறேன்.. உங்களுக்குள் மனமிருந்தால் துரத்திவிடத்துணிந்துவிடுங்கள் உங்களுக்குள்ளிருக்கும் துரோகியையும்,உங்களோடிருக்கும் துரோகிகளையும். ஆக நண்பனுக்கு எதிர்ச்சொல் பகைவனென்ற அகராதியை அழித்துவிட்டு துரோகியென்னும் இலக்கணத்திற்கு இணக்கி தேடுங்கள்.......தேடுங்கள்.....சுயனலத்தைவிட்டுவிட்டு துரோகிக்கு எதிர்ச்சொல்லெவர் என்பதை.மானுட தேசத்தில் மண்புதைந்த இதயத்தை தோண்டியெடுத்து ஒருமுறை துவைத்தபின்பு மானுடத்தில் தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடி அடைந்துவிட்டால் தேடலின் பொருள் விளங்கும்.என் கேள்விக்கும் பதில் கிடைக்கும்.
தொடர்ந்து விழிக்கும்.........
Saturday, August 16, 2008
Sunday, March 9, 2008
விழிக்குமா மானுடம்...(3)
மெளனிகளாக வாழும் சமூகத்தின் சலனத்தை சத்தமிட்டுச் சொல்லி சவுக்கடிபட சங்கற்பமெடுத்ததால் கலையாத மெளனங்களோடு கண்டுகொள்ளாமல் கவிழ்ந்து கிடக்கும் மனிதத்தின் மற்றுமொரு பக்கத்தை பகரவிழைகின்றேன்.தவறுகள் நடக்கும்போது தட்டிக்கேட்பதை தவறென்பது உங்கள் வாதம் என்றால் அன்னையின் சேலையை அடுத்தவன் அவிழ்க்கும்போது மெளனிக்க தயாராகிவிட்டீர்கலென்ரல்லவா அர்த்தம்?தன்மானத்தையும் தறித்துவிட்டு தரித்துக்கொண்ட உங்கள் மெளனத்தினாத்தான் உணர்ச்சிகளின் உள்வாங்கல்கள் உங்களைவிட்டு ஓடிவிட உதரவில்லை உங்கள் கரங்கள் .ஆக நீங்களும் மரங்கள்.களவு செய்பவனைக் கண்டுகொள்ளாமலிருந்து காழ்ப்பை மீறி கயவுசெய்ய கற்றுக்கொடுப்பது நீங்களல்லவா?காலவோட்டத்தில் காணமல் போகும் காயத்திற்காக கடமையை மறப்பதுதான் கற்று வந்த பாடமோ?கற்பது கரையேறவென்றால் கற்றபடி நடக்கவும் கற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.கீதை,திருக்குறள்,திருமறை,திருக்குர்றான் போன்றவற்றை செய்யுளாய் படித்த ஆர்வம் செயலுருப்படுத்துவதில் இல்லையே.தண்ணீரில் எழுதப்படாமல் கண்ணீரில் எழுதியிருக்கிறேன் இந்த உண்மையை.
மெளனிகளாய் மெளனித்துக்கிடக்கும் சமூகத்தை மரணச்சாக்காடென்னல் தவறோ?உணர்வுகளை உதறிவிட்டு உசும்பாமல் இருப்பவனை பிணமென இயம்பல் பிழையோ?ஆக நீங்களும், நானும் வாழ்வது மயானத்தில்தான். நாற்சுவரிடையே ஏகாந்தமாய் நன்றாக சிந்தியுங்கள்..... மயானத்தின் மெளனத்தைக் குலையுங்கள்...!மனச்சாட்சிக்கும் மானூடத்திற்குமான மதிலை குடையுங்கள்....!மாறாத சுய நலத்தைக் குறையுங்கள்........! இனி உங்களுக்காக நானும் எனக்காக நீங்களும் யாவருக்குமாக நாங்களும் எங்களுக்காக யாவருமாவோமா??
தொடர்ந்து விழிக்கும்......
Thursday, March 6, 2008
விழிக்குமா மானுடம்....(2)
வேதனை விம்மலின் போது கசிந்தாலும்,விரும்பியே இன்பத்தில் திளைத்தாலும் வெளிவரும் கண்ணீர் கரிக்கத்தான் செய்வதுபோல் விளையாட்டாய் விளைந்தாலென்ன ,வினையாக வந்தாலென்ன கசியும் குருதி செம்மைதனே .கனக்கத்தானே செய்கிறது இதயவறை,சொல்கிறது விதி இதயழுத்தம் என்று.பகுத்தறிவாளரிடையே பாசத்தைப் பகர்வதென்னவோ பைத்தியகாரத்தன்மையென தோன்றக்கூடும்.திக்கற்றவர்க்கு திசைகாட்டியாய் வக்கற்றவனுக்கு வழிகாட்டியாய் என்னதான் செய்யமுடியுமோ ஒளியூட்டல் செய்ய எத்தணிக்க விளைகிறேன்.முட்களை விட்டுவிட்டு ரோஜாக்களை பக்கலாமே என்னலாமுங்கள் வியாக்கியானம்.ஓ அப்படியென்றால் கயிறு என்பதற்காக சனற்கயிற்றை கழுத்தில் கட்டிக்கொள்ள யார் தயாராய் இருக்கிறீர்கள்.நடப்பதையும்,நடப்பதையும் நாசவழியென்றால்,உண்மைகளை உரசி பொய்களுக்கு தீவையென்ரால் உறுதியாகச் சொல்கிறீர்களே உதவாதவன் என்று.....
உண்மைகளான உணர்வுகளை வெளிப்படையாக ஒப்புவிக்க உயிரெதற்கும் அனுமதிக்கக்கூடாது என்பதர்க்குத்தானே உள்ளத்தை உள்ளே வைத்து உருவத்தால் மூடிவிட்டிருக்கிறான் இறைவன்.சிந்தித்துக்கொண்டேயிருக்கிறேன் உண்மையறிந்தவன் ஊமையாகும்போது உணர்வாளன் உதைவாங்க காரணம் கடவுளா இல்லை காலமா?வாழ்வை ரசிப்பதோடு வரப்போகும் மரணத்தை அர்த்தமுள்ளதாக்க இன்றுகொல் என்றுகொல் என்றென்னாது பின்னாலேயே கூற்றுவன் நிற்பதாய் நினைத்து உள்ளத்தை ஒருகண்ணாடியாய் காண்பிக்க யாவரும் முயலவேண்டுமல்லவா................
தொடர்ந்து விழிக்கும்.......
உண்மைகளான உணர்வுகளை வெளிப்படையாக ஒப்புவிக்க உயிரெதற்கும் அனுமதிக்கக்கூடாது என்பதர்க்குத்தானே உள்ளத்தை உள்ளே வைத்து உருவத்தால் மூடிவிட்டிருக்கிறான் இறைவன்.சிந்தித்துக்கொண்டேயிருக்கிறேன் உண்மையறிந்தவன் ஊமையாகும்போது உணர்வாளன் உதைவாங்க காரணம் கடவுளா இல்லை காலமா?வாழ்வை ரசிப்பதோடு வரப்போகும் மரணத்தை அர்த்தமுள்ளதாக்க இன்றுகொல் என்றுகொல் என்றென்னாது பின்னாலேயே கூற்றுவன் நிற்பதாய் நினைத்து உள்ளத்தை ஒருகண்ணாடியாய் காண்பிக்க யாவரும் முயலவேண்டுமல்லவா................
தொடர்ந்து விழிக்கும்.......
விழிக்குமா மானுடம்
உலகமெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் உறவுகளின் ஓலங்கழுக்கிடையே கட்டவிழ்ந்து கிடக்கும் மானுடத்தைப் பற்றி கதைகவும் காலமொதுக்குங்கள்.எழுத்துக்களின் ஊடல்களையும் தாண்டி உணர்வுகளின் தேடல்களுக்கும் ஒத்துழைப்புத்தாருங்கள்.எழுதப்படுவதற்காக எழாமல் எழுந்தவைகளையே எழுத்துரு என்பவன் நான் என்பதால் மரணித்துக்கொண்டிருக்கும் மானுடத்தை மறந்துவிட்டுப்போக முடியவில்லை. நான் மனக்கிலேசங்களாக கிறுக்குவதை மனதில் எடுத்து களிப்பதும் அல்லது கழிப்பதும் உங்கள் மனச்சந்தோசங்களே..............
போலிகளுக்கிடையே புதுப்பொன்னும் போக்கிழந்து போவது போல், பாவிகளுக்கிடையே பரவியுள்ள பகல் வேசங்களால் நாதியற்றுப்போகிறது நடுவழியில் நலன்கருதும் பாசங்களும்.தேசத்தின் ஓரத்தில் நின்று ஒலித்துக்கொண்டிருக்கும் அலைகள் அடிப்பதால் தேசம் நகராது. ஆனால் மனிதாபிமானம் அரிக்கப்படுகிறது அதிவேக தொடல்பாடல் துடிப்பில். காற்றின் வேகத்தை கையிலெடுக்கத் துடிக்கும் மனிதனின் பேராசைதான் வித்திட்டிருக்கிறது மானுடத்தை மரணப்புதைகுழிக்குள் அனுப்ப. வேகத்தின் மீதம் விதைபோட்டிருக்கிறது மாற்றினமாய் மறுவீட்டை நினைக்க......
தொடர்ந்து விழிக்கும்......
Friday, February 29, 2008
அனுபவம்
தீயின் அருகில் வெம்மை கண்டேன்
சேயின் அருகில் அன்பை கண்டேன்
நாயின் உறவில் நன்றி கண்டேன்
நண்பன் உறவில் கண்ணீர் கண்டேன்
தாயின் அருகில் பாசம் கண்டேன்
தேயும் நிலவிலும் தெளிவு கண்டேன்
நோயின் வலியிலே வாழ்வைக் கண்டேன்
வாயின் காதலில் வலியைக் கண்டேன்
சேயின் அருகில் அன்பை கண்டேன்
நாயின் உறவில் நன்றி கண்டேன்
நண்பன் உறவில் கண்ணீர் கண்டேன்
தாயின் அருகில் பாசம் கண்டேன்
தேயும் நிலவிலும் தெளிவு கண்டேன்
நோயின் வலியிலே வாழ்வைக் கண்டேன்
வாயின் காதலில் வலியைக் கண்டேன்
Thursday, February 28, 2008
நடிகன்
நல்லவன் போல நடிக்க நான் நடிகனில்லை
ஏனெனின் நான் நண்பன்
வல்லவன் போல நடிக்க நான் வீரனில்லை
ஏனெனின் நான் வம்பன்
ஏனெனின் நான் நண்பன்
வல்லவன் போல நடிக்க நான் வீரனில்லை
ஏனெனின் நான் வம்பன்
Subscribe to:
Posts (Atom)